பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் பிரபல டிவி ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல், அதில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை வைஷ்ணவி அருள்மொழி அவர்களும் ஒருவர்.
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீசன் 2.வில் ஹீரோவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் இளம் நடிகையான நடிகை வைஷ்ணவி அருள்மொழி. இவர் மற்றொரு பிரபல டிவியில் ஒளிபரப்பான “மலர்” என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
இவர் நடிகர் சந்தானம் அவர்களின் நடிப்பில் வெளியான ‘சபாபதி’ படத்தில் சந்தானத்திற்கு தங்கையாக நடித்திருந்தார், சோசியல் மீடியாக்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை உப்லோஅது செய்யும் இவர், தற்போது சேலை அணிந்து கொண்டு ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.