கொரோனாவிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையால் கண் பார்வை குறைவு ஏற்பட்ட பெண்!!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் கணவர் நிவராண உதவி கேட்டு அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

   

வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த முத்து என்பவரின் மனைவி மீனாவுக்கு கடந்த 12ம் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில்,

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

வீடு திரும்பிய 6 நாட்களில் மீனாவுக்கு இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டதால்,

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.