
நமது நாட்டில் தான் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ளதாக ஆய்வறிக்கை பலதும் கூறி வருகின்றது , அதற்கு காரணம் ஏழை மக்கள் நமது நாட்டில் தான் அதிகம் வாழ்ந்து வருகின்றனர் , இவர்களுக்கு அன்று என்ன சம்பாதிக்கிறார்களோ ,
அதனை வைத்து தான் அவர்கள் சாப்பாடு சாப்பிடுவதும் ,சாப்பிடாததும் அடங்கியுள்ளது , நாம் பேருந்தில் செல்லும் போதோ , ரயிலில் செல்லும் போதோ குழந்தைகள் அவர்களின் குடும்ப சூழ்நிலைக்காக அவர்களிடம் உள்ள ஒன்றை விற்பனை செய்து,
அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் , அதே போல் சிறுவன் ஒருவர் வேகமாக வாகனங்கள் செல்லும் சாலையில் எலந்த பழம் விற்றுள்ளார் அந்த வழியாக வந்த காரில் இருந்த நபர் ஒருவர் அந்த சிறுவனுக்காக வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார் ,