மகன் மற்றும் கணவரோடு சேர்த்து தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடிய பூர்ணிமா பாக்யராஜ் , இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிப்பதும் படங்களை இயக்குவது போன்ற இரண்டு துறைகளிலும் வல்லமை பெற்றவர் பாக்யராஜ் அவர்கள். இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 80களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ்.

   

இவர் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார். இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமா தம்பதியருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற ஒரு மகனும் உள்ளனர்.சாந்தனு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

பூர்ணிமா பாக்யராஜ் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்டார் , அண்மையில் இவரது 62 வது பிறந்தநாளை தனது மகன் மற்றும் கணவரோடு சேர்ந்து கொண்டாடியுள்ளார் ,அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது .,