விஜய் தொலைக்காட்சியில் மக்கள் பேராதரவுடன் பல சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தொகுத்து வழங்கி வரும் மாகாபா, ப்ரியங்கா இருவருக்கும் சின்னத்திரை ரசிகர்களுக்கு எப்போதுமே மிகவும் பிடித்த தொகுப்பாளர்கள் தான். சீசன் 1ல் இருந்து 8 வரை மக்களில் வரவேற்பில் வளர்ந்து வந்துள்ளது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. லாக் டவுன் போட்டதால் இந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது 8வது சீசன் துவங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தான். ஆம் விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக மக்களின் ரசனைக் கேட்ப நிகழ்ச்சிகளை இயக்கி வருபவர் தான் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் இயக்குனர் ரவூபா அவர்கள்.
இதைபோல் சிறுவர்களுக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் என நிகழ்ச்சி உள்ளது. இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 3வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பிரகதி குருப்ரசாத். இவர் தற்போது பல முன்னணி நட்சத்திரங்களில் படங்களுக்கு பின்னணி பாடல்கள் பாடி வருகிறார். இந்நிலையில் முன்னணி நடிகை நயன்தாராவை கட்டிபிடித்தபடி, பிரகதி புகைப்படம் எடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..