அக்கா..தம்பி பாசம்ன்னா சும்மாவா? மறுவீடு அழைத்து செல்லும் போது அக்கா தம்பி இடையே நிகழ்ந்த பாசப்போராட்டம்..!

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதில் அக்கா, தம்பி பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும் போதே, முதல் குழந்தையாக இருக்கும் பெண் குழந்தை தம்பியின் வரவுக்கு துள்ளித் துடிப்பாள். பல இல்லங்களில் தம்பி பாப்பாக்களுக்கு இரண்டாவது தாயாகவே மாறி இருப்பாள் அக்கா.

   

பள்ளிக் கூடத்துக்கு கையை பிடித்து அழைத்துச் செல்வது, காலையில் குளிப்பாட்டி, டிரஸ் செய்து விடுவது என தம்பிகளின் அழகிய பொழுதுகளில் அக்காக்களின் கைவண்ணமும் இருக்கும். அதனால் தான் மணம் முடிந்த பின்னர் தன் கணவர் இல்லத்துக்கு செல்லும் அக்காக்களை பிரிய முடியாமல் ஓவென்று அழுகின்றனர் தம்பிகள்.

இங்கேயும் அப்படித்தான் திருமணம் முடிந்து, தன் அக்கா மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறார். அந்தப் பிரிவு தாங்க முடியாமல் தம்பி கதறி அழுகிறார். குறித்த இந்த காணொலி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.