அடங்காத ..ஜல்லிக்கட்டு காளை..!! வளர்த்தவரைப் பார்த்ததும் என்ன செய்யுதுனு பாருங்க..!

முன்பெல்லாம் விவசாயிகள் அனைவரது வீட்டிலும் மாடு இருக்கும். வயலில் நெல் அறுவடை முடிந்ததும் அந்த வைக்கோலை மாடுகளுக்குக் கொடுப்பார்கள். இதுபோக மாட்டின் சாணம் நெல் வயலிலும் உரமாக பயன்படும்.

   

ஆனால் இப்போதெல்லாம் நாட்டுமாடுகளை வளர்ப்பவர்களே வெகுவாகக் குறைந்து வருகின்றனர். இப்போது விவசாயத்தில் முழுக்க எந்திரங்களின் ராஜ்ஜியம் வந்துவிட்டது. இதனால் இப்போதெல்லாம் விவசாயத்தில் உழவு மாடு பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

இப்படியான சூழலில் உழவு தொடங்கி அத்தனை விவசாய வேலைகளுக்கும் பயன்பட்டுவந்த நாட்டு மாடுகளும் அரிதாகிப் போய்விட்டது. இப்போதும் காளை மாடுகளை அதிகமாக வளர்ப்பவர்கள் மதுரை சுற்றுவட்டாரத்தில் அதிகம். அதற்குக் காரணமாக இருப்பதே தென் மாவட்டங்கைல் வீரியத்துடன் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தான்.

அந்தவகையில் ஜல்லிகட்டில் காளைகள் வாடி வாசல் தாண்டி வந்ததும் பலரும் அடக்க பாய்வார்கள். இங்கேயும் அப்படித்தான் ஒரு காளை வாடிவாசல் தாண்டி வந்தது. ஆனால் கம்பீரமான அதன் தோற்றமும், பார்வையும் அதை யாருமே அடக்க வர முடியாதபடிக்கு பயமுறுத்தியது. இதனால் யாருமே அந்தக் காளையை நெருங்கவில்லை.

அது கடைசிவரை கம்பீரமாகவே நின்றது. கடைசியில் அந்தக் காளையின் உரிமையாளர் வர, அதுவரை பார்வையாளேயே டன் அருகில் யாரையும் வரவிடாத காளை பெட்டிப் பாம்பாக அவருக்கு முன்பாக பாசத்தோடு சென்றது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

 

View this post on Instagram

 

A post shared by panneer (@daily.viral.tamil)