அது பொம்மை இல்லடா அது உண்மையான பாம்பு… இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம்பா… ராஜநாகதுக்கு ஏற்பட்ட நிலைமைய பாருங்க..!

பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு பயங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு, தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பாம்பு வழிபாடே பிரதானம். பாம்புகளுக்கு என்றே இங்கே பிரத்யேக ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது.

   

பாம்புகள் நாமாக அவைகளை தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பாம்பைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் மிகவும் பயந்து போய்விடுகிறோம்.

இன்னும் சிலரோ பாம்பை மிகவும் அசால்டாக டீல் செய்வார்கள். இங்கேயும் அப்படித்தான் இந்த கால யூத் ஒருவர் பாம்பை அசால்டாக டீல் செய்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோரத்தில் மிகவும் பெரிய ராஜநாகம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ராஜநாகத்தை இரு இளைஞர்கள் அசால்டாக பிடித்தனர். சாலையின் குறுக்கே போட்டால் முழு சாலை அளவுக்கு இருந்தது அந்த ராஜ நாகம்.

ஆனால் இளைஞர் ஒருவர் அதை அசால்டாக கழுத்துப் பகுதியில் பிடித்து சாக்குப்பைக்குள் போடுகிறார். ஆனாலும் அவர் அப்படிப் பிடிக்கும் போது பாம்பை காலால் மிதித்து, அதை அதிக தொந்தரவு செய்து பிடிப்பதாக வன ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறித்த இந்த வீடியோவை நீங்களே பாருங்கள். ஆனாலும் இந்த பாம்பு எவ்வளவு பெருசு பாருங்க…