இந்த குட்டிக்குழந்தை சாப்பிடும் அழகைப் பாருங்க.. நாள் முழுவதும் பார்த்து ரசிக்கலாம் போலயே… வீடியோ இதோ

குழந்தைகள் தான் இந்த உலகிலேயே கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அவ்வளவு அன்பினைக் குழந்தைகள் கடத்துவார்கள். அதனால் தான் எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும் போது அந்த சோகம் அப்படியே நம் நெஞ்சை விட்டு மறைந்துவிடும்.

அதேபோல் குழந்தைகள் மிகவும் பாசத்துக்கிரியவர்களாக இருப்பார்கள். அவர்களது அன்பு தூய்மையானதாகவும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும். அதனால் தான் குழந்தைகள் செய்யும் சின்ன செய்கைகள்கூட அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவிடுகிறது.

   

பொதுவாக சாப்பாட்டைப் பிடிக்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எனினும் சாப்பாட்டை பசிக்காக சாப்பிடுபவர்கள், வெறுமனே ருசிக்காக சாப்பிடுபவர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். சிலர் வாழ்வை நகர்த்துவதற்கு சாப்பாடும் ஒரு அங்கம் என நினைப்பார்கள். இன்னும் சிலரோ, ‘இந்தப் பொறப்புதான் நல்லா ரசிச்சு சாப்பிடக் கிடைச்சுதே’’ என்னும் பிரகாஷ்ராஜின் பாடலைப்போல் ரசித்து, ருசித்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

இங்கே ஒரு குழந்தைக்கு தட்டில் சாப்பாடு வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே அந்தக் குழந்தைக்கு தூக்கம் கண்ணைச் சொக்குகிறது. இதனாலேயே சாப்பாட்டுத் தட்டில் கோலம் போடுவது போல் கையை பிசைந்துகொண்டே குழந்தை தூங்கி வழிகிறது. சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே குழந்தை தூங்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..