உயிரிழந்த தந்தை… அவருக்காக சேர்த்த தொகையை கொரோனா நிதியாக அளித்த மாணவி

கோவில்பட்டி அருகே தந்தையை இ.ழ.ந்.த நிலையில் தான் சேமித்த பணத்தை மாணவி முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் சண்முகசிகாமணி நகரில் உள்ள நியாய விலைக்கடையில் இன்று கரோனா உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

   

இதில், பங்கேற்ற கனிமொழி எம்.பி., அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பங்கேற்றனர். அப்போது நாகராஜ் என்பவரின் மகள் ரிதானா என்னும் 8ம் வகுப்பு மாணவி தான் சேமித்து வைத்திருந்த 1970ரூபாயை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

அதனுடன் எழுதிய கடிதத்தில், மரியாதைக்குரிய தமிழக முதல்வருக்கு, என்னோட தந்தை மருத்துவ செலவுக்காக, எனது பெற்றோர், கைச்செலவுக்காக தந்த பணத்தை சேமித்து வைத்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக எனது தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார்.

நான் சேமித்த பணம் ரூ.1970-ஐ கொரோனா நோயாளிகளுக்காக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். என்னை மாதிரி இன்னொரு குழந்தை தந்தையையோ, தாயையோ இழக்காமல் இருக்க பிராத்திக்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.