எதார்த்தமான நடிப்பினால் சினிமாவில் கலக்கிய, நவரச நாயகன் கார்த்தியின் மனைவி யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக்கு. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “அலைகள் ஓய்வதில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மௌன ராகம், ஆகாய கங்கை, லக்கி மேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

மேலும், இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து ராகினியின் தங்கை ரதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் கார்த்திக்.

 

இவர் தனது இரு மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படத்தில் அவரது மகன்களும் உள்ளனர். அவரின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.