குடி பழக்கத்தால் மாறிய நடிகர் ரகுவரன் வாழ்க்கை..!! அவர் மரணத்தின் போது மனைவி ரோகிணி அனுபவித்த துன்பம்..!! கண்ணீர் வரும் சோக கதை.!!

தமிழ் சினிமாவில் 90கள் மற்றும் 2000களில் மிகப் பெரிய வில்லன் நடிகராக திகழ்ந்தவர் ரகுவரன். குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ரகுவரன், ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் து ன்ப த்தில் உழல்பவராகவே ரகுவரன் இருந்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு, நடிகை ரோகினியைத் திருமணம் செய்து கொண்ட ரகுவரன், 2004 ஆம் ஆண்டு அவரிடமிருந்து பிரிந்து, வி வாகரத்தும் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்.குடி பழக்கத்துக்கு அடிமையானவராக ரகுவரன் இருந்தார், இந்த கொடிய பழக்கத்திலிருந்து அவரை மீட்க முயன்றவர்களில் ஒருவர் தான் ரோகிணி.

   

ஆனால் அவரை போதை பழக்கத்தில் இருந்து திருத்த முடியவில்லை என்றும், அவருடன் தொடர்ந்து வசிப்பது கடினம் என்பதாலேயே விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் ரோகிணி கூறினார்.இதையடுத்து, தனிமையில் வாழக் கற்றுக்கொண்டேன் என்று ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தது அவரின் வாழ்க்கை து ன்ப த்தை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது.கு டிப் பழ க்கத்துக்கு அ டி மை யான ரகுவரன் பல காலமாகவே உடல் நலம் பா திக்க ப்பட்டிருந்தார். அவருக்கு நீரிழிவு நோயும் இருந்தது.

இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாத ம் அவர் உடல் நிலை மிகவும் மோசமாகியது. இதையடுத்து அவரை கவனித்துக் கொள்ள நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டார்.எனினும் 2008 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி திடீரென ரகுவரன் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,

ஆனால் சிகிச்சை பலனின்றி உடலுறுப்பு செயலிழந்ததால் பரி தாபமாக உயிரிழந்தார்.என்ன தான் ரகுவரனை பிரிந்திருந்தாலும் அவரின் மறைவு ரோகிணிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது, தகவல் அறிந்ததும் மருத்துமனைக்கு மகனுடன் ஓடி வந்து கதறி அழுதார்.

நடிகை ரோகினி ரகுவரனின் மரணத்தின் அவர் அனுபவித்த துன்பங்களை முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ரகுவரன் இறந்தபோது, ரிஷியை நான் பள்ளியில் இருந்து அழைத்து வந்தேன். அன்று, எங்களுக்கு ஊடகங்களில் இருந்து சிறிது தனிமை தேவைப்பட்டது. அதனால், ஊடகங்கள் யாரும் வரவேண்டாம் என கோரிக்கை விடுத்தேன்.

ஆனால், நாங்கள் வீட்டிற்குச் சென்றபோது, அங்கு பத்திரிக்கையாளர்கள் குவிந்துவிட்டனர். ரிஷிக்கு அது கடினமாக இருந்தது. அன்றிலிருந்து, அவன் பொதுநிகழ்ச்சிகள் எதிலும் என்னுடன் பங்கேற்பதில்லை. என்னுடன் வெளியே வரும்போது, என்னுடன் சேர்ந்து ரசிகர்கள் செல்பி எடுப்பதால், அவன் என்னுடன் வெளியே வருவதே இல்லை என கூறினார்.