தாயின் பிறந்தநாளிற்கு மகன் கொடுத்த சர்ப்ரைஸ்…!!ஆச்சர்யத்தில் உறைந்து போன தாய்..கண்கலங்க வைத்த காணொளி

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம் மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.

   

நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.

எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம் பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது.

இங்கேயும் அப்படித்தான் ஒரு இளைஞர் அவர் தாய் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தார். அந்த அம்மாவுக்குப் பிறந்தநாள் வந்தது. உடனே தன் தாய்க்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்தார் மகன்.

உடனே தன் இறந்து போன தந்தையை மெழுகில் சிலையாகச் செய்து வைத்திருந்தார். கண்களை கட்டி அவரது தாய அழைத்துச் சென்று அருகே கொண்டுவிட்டு இதைக் காண்பித்தார். இதைப் பார்த்ததும் அந்த தாய் ஒருநிமிடம் சிலையாக உறைந்துபோய் நின்றார். இதோ அந்தக் காட்சிகளை நீங்களே பாருங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by panneer (@daily.viral.tamil)