திருமணமான 2 மாதத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த கதி : கண்ணீரில் குடும்பம்!!

தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காமல் கணவரும் தனது உ.யிரை மாய்த்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் அடுத்த சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன்(28).

இவருக்கும் நந்தினி (23) என்ற பெண்ணிற்கும் கடந்த மார்ச் மாதம் 23ம் திகதி அன்று திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 11ம் திகதி அன்று நந்தினிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் முத்து கிருஷ்ணன்.

   

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார், இதையடுத்து இறுதிச்சடங்கு முடியும் வரை மனைவியை உற்று பார்த்து அழுதபடி இருந்தார் முத்து கிருஷ்ணன்.

பின்னர் நந்தினி இறந்த துக்கத்தில் யாரிடமும் பேசாமல், சரிவர சாப்பிடாமல் இருந்த முத்துகிருஷ்ணன், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

வீட்டினர் வந்து பார்த்துவிட்டு, மயங்கி கிடந்த முத்துகிருஷ்ணனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனக்கு தூக்கிச்சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மாலை முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார்.

திருமணமாகி 2 மாதத்திலேயே புதுமணத்தம்பதிகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அவர்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.