திருமணமான 8 நாட்களில் வாந்தி எடுத்த புதுப்பெண்! அவர் சொன்ன தகவலால் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

இந்தியாவில் திருமணமான 8 நாளில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த தேவேந்திர குமார் என்பவருக்கும் கல்பனா என்ற பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

   

இந்த நிலையில் மீண்டும் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் சம்பிரதாய முறைப்படி இரண்டாவது முறையாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த சூழலில் கல்பானா நேற்று முன் தினம் இரவு திடீரென தொடர்ந்து வாந்தி எடுத்தார். அவர் க.ர்.ப்பமாக இருப்பதால் வாந்தி எடுப்பதாக குடும்பத்தார் முதலில் நினைத்த நிலையில் தான் விஷம் குடித்து விட்டதாக அவர் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கல்பனா எதனால் விஷம் குடித்து தற்கொலை செய்தார் என இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.