திருமணம் முடிந்து மறுவீட்டிற்கு மீன்பாடி வண்டியில் சென்ற தம்பதிகள்.. இதுதான் காரணமா..!

திருமணமான தம்பதிகளை மீன்பாடி வண்டியில் மறுவீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ள சம்பவம் ஆடம்பரமாக திருமணத்தினை நடத்துபவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியப்பன் நகரில் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கழைக் கூத்தாடுவது, சர்க்கஸ் செய்வது இவர்களின் பிராதன தொழிலாக இருந்து வருகிறது. சன்னதி புதுகுளத்தை சேர்ந்த சுப்பையா மகளான அம்சவல்லி என்பவருக்கும், மாரியப்பன் நகரை சேர்ந்த கணேஷ் என்பவருடைய மகனாகிய விஜய்க்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

   

திருமணம் முடிந்து பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வதற்கு 10கிலோ மீற்றர் தூரத்தினை மீன்பாடி வண்டியில் மணமக்கள் சென்றுள்ளனர். இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டார் கூறுகையில், பெண் வீட்டில் வரதட்சணை வாங்க மாட்டோம். எங்களால் முடிந்த நகையினைப் போட்டு திருமணம் செய்து வருவோம். ஒரு காலத்தில் மாட்டுவண்டியில் மறுவீட்டிற்கு அழைத்துச்சென்ற காலம் போய், தற்போது கார், மற்றும் குதிரை வண்டியில் அழைத்துச்செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

நாங்கள் எங்களது வசதிக்கு ஏற்ப மீன்பாடி வண்டியில் அமர்ந்து வருவதாகவும் இதுவே தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். இதுகுறித்து மாப்பிள்ளை கூறுகையில், மாட்டுவண்டியிகை கையில் இழுத்துச் செல்வோம். தற்போது காலம் மாறியதால் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தும் மீன்பாடி வண்டியினை இவ்வாறு பயன்படுத்தி ஊர்வலம் சென்று வருகிறோம். இது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.