தொடர்ந்து வாந்தி எடுத்த திருமணமான இளம்பெண் : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! அம்பலமான உண்மை!!

இந்தியாவில் திருமணமான இளம்தம்பதி ம.ர்மமான சூழ்நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஜலத்தரை சேர்ந்தவர் சாகர் (26). இவர் மனைவி ராதா (24).

தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் கணவர் குடும்பத்தாருடன் ஏற்பட்ட பி.ரச்சனையால் ராதா தனது பெற்றோர் வீட்டில் சில மாதங்களாக வசித்து வந்தார்.

   

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சாகரும் மாமியார் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென வீட்டில் மயங்கி விழுந்த சாகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் நேற்று (சனிக்கிழமை) காலையில் வயிற்று வலியால் துடித்த ராதா தொடர்ந்து வாந்தி எடுத்தார். இதனால் குடும்பத்தார் பதறிய நிலையில் பின்பு அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இருவருமே விஷம் குடித்திருந்தனர் என பின்பு தெரியவந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் இளம் தம்பதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், இதனால் இரு குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியின் மரணம் தற்கொலை தானா? மற்றும் அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.