நாட்டிலேயே முதல் சிறிய நடமாடும் வீடு! 1 லட்சத்தில் ஆட்டோவிலேயே வீடு கட்டி அசத்திய இளைஞர்.. பாராட்டும் ஆனந்த் மகிந்த்ரா நிறுவனர்!

சென்னையை சேர்ந்த இளைஞர் அருண் பாபு, இவர் தொழில் முனைவோர்களின் முக்கியத்துவத்தை இன்ஜீனியரிங்கின் நாட்டுக்கு உணர்த்தும் வகையில், 2020 ஆம் ஆண்டு ஆட்டோ வீடு ஒன்றை தயாரித்தார். இந்த ஆட்டோவில் வீட்டில் இருப்பதை போன்றே கழிவறை, குளியலறை, படுக்கையறை , சமையலறை என அனைத்து வசதிகளும் உண்டு. மேலும், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற வசதிகளும் இருக்கின்றன.

   

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆட்டோ வீட்டின் மேலே 250 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டியும் உண்டு. இத்தனை வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த டைனி வீட்டின் தயாரிக்க மொத்தம் ஒரு லட்சமே ஆகியிருந்தது. இதனால், நாட்டிலேயே முதல் சிறிய நடமாடும் வீடு இதுதான். இந்த வீட்டுக்கு சோலோ 0.1 என்று அருண் பாபு பெயரிட்டிருந்தார். அருண் பாபு இந்த வீட்டை தயாரித்த சமயத்தில் சமூகவைலைத்தளங்களில் வைரலாக பரவியது.

டிராவல்லிங்கை விரும்பும் இளைஞர்களுக்கு இத்தகைய நகரும் வீடுகள் உதவிக்கரமாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டோ தயாராகி ஒரு ஆண்டுகளுக்கு பிறகு தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா, தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆட்டோவின் புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர் அருண்குமாரின் திறமையை வெகுவாக பாராட்டினார்.

இத்தனை சிறிய இடத்தில் ஒரு வீட்டையே அமைக்க முடியும் என்று சமூகத்துக்கு எடுத்துக் காட்டிய இளைஞர் அருண் பிரபுவின் கிரியேட்டிவிட்டியை பாராட்ட வார்த்தைகளே இல்லையென்றும் ஆனந்த் மகிந்த்ரா தெரிவித்துள்ளார். மேலும், அருண் பிரபுவை தொடர்பு கொள்ள மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். எங்களது பொலிரோ பிக்கப் வேனுக்கு இது போன்ற டிசைனை வடிவமைக்க அருண் முன்வருவாரா? அவரின் இணைப்பு எண்ணை தர முடியுமா? என்று ஆனந்த் மகிந்த்ரா கேட்டுள்ளார். இதனால் தற்போது இந்த தகவல் வைரலாக பேசப்பட்டு வருகிறது…