படப்பிடிப்பில் சமந்தாவின் நடிப்பால் கடுப்பாகி கத்திய நயன்தாரா! கோபத்திற்கு என்ன காரணம்?

படக்குழுவினர் சமந்தாவின் நடிப்பை பாராட்டியதால் நடிகை நயன்தாரா கடுப்பாகி கத்திய விடயம் ஒன்று வைரலாகி வருகிறது. இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ” காத்து வாக்குல இரண்டு காதல்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகின்றார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாக விளங்கி வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா.

   

இவர்கள் இருவரும் இணைந்து தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். இதில் நடிகை சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாக்கப் பட்டது. இதன் போது ஒரே டேக்கில் சமந்தா அசால்ட்டாக தனது காட்சியை சூப்பராக நடித்து அசத்தியதை பார்த்து, சுற்றி இருந்த கூட்டம் கைதட்டி கரகோஷத்தை எழுப்பியுள்ளனர்.

இதனை பார்த்த நடிகை நயன்தாரா, உடனடியாக கடுப்பாகி சைலென்ஸ என கத்தியுள்ளாராம். மேலும் நயன்தாரா நிறுத்தங்கள் என வில்லன் போல் கத்தியதுடன் இது ஷூட்டிங் இடம் கத்தாதீர்கள் தலை வலிக்குது என கடுப்பில் திட்டியுள்ளார். தனது காதலன் விக்னேஷ் சிவன் படம் என்றதால் நடிகை நயன்தாரா இப்படி செய்துருக்கிறார் என பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.