பாரம்பரியம் மாறாத கிராமிய கலை.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி!!

கோவில் திருவிழாக்களில் பெண்கள் ஒன்றாக கூடி ஆடும் நடனத்தின் பெயர் கும்மி. இந்த கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தம் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து.

இது தொன்று தொட்டு வரும் ஒரு நடனக் கலை ஆகும். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கும்மி வழக்கில் உள்ளது. குரவை என்ற கலையில் இருந்து, கும்மி பிறந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் இந்த கலைகள் கிராமப்புறங்களில் வழக்கில் உள்ளது. வீடியோ இதோ..