பிக்பாஸ் கேபியா இப்படி? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் வெளியிட்ட புகைப்படம்- இதோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா. கடைசி கட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார். பணத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறும் முடிவை அவர் எடுத்தது சரியான முடிவு என்றும் இந்த சின்ன வயதில் மிகச் சரியான முடிவை எடுத்த கேப்ரில்லாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது.

   

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் கேப்ரில்லா தனது சக போட்டியாளர்களின் நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்து கொண்டிருக்கிறார் என்பதும், அது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1, 7C என விஜய் தொலைக்காட்சி மூலம் அறிமுகமானவர் கேபிரியலா.

இதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான 3, சமுத்திரிக்கனியின் அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கில் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வரும் கேபிரியலா ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..