மடிந்த மனிதநேயம் : மகளின் சடலத்தை கட்டி காரிலேயே எடுத்துச்சென்ற தந்தை : நெஞ்சை உலுக்கும் காட்சி!!

இந்தியாவில் தந்தை ஒருவர் இறந்த மகளின் சடலத்தை கட்டி காரிலேயே எடுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலேயே இக் கொடூர சம்பவம் நடந்துள்ளது.

   

ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் கோட்டாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 34 வயதுடைய சீ்மா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மகளின் சடலத்தை Jhalawar-ல் உள்ள வீட்டிற்கு எடுத்துச்செல்ல சீமாவின் தந்தை ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளார்.

கோட்டாவிலிருந்து 88 கி.மீ தொலைவில் உள்ள Jhalawar-க்கு சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் நிறுவனம் 35,000 கேட்டு மகளை இழந்து துடித்துக்கொண்டிருந்த தந்தையிடம் பேரம் பேசியுள்ளது.

35,000 இல்லாத தந்தை, சீமாவின் உடலை கட்டி தனது காரில் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் படுக்க வைத்து Jhalawar-ரில் உள்ள வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளார். மனசாட்சி மனிதநேயம் இல்லாமல் 88 கி.மீ-ருக்கு 35,000 கேட்ட ஆம்புலன்ஸ் நிறுவனத்தை பலர் திட்டித்தீர்த்து வருகின்றனர்.