மறைந்த நடிகர் முரளியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? முதன்முறையாக வெளியான முழு குடும்ப புகைப்படம்

தமிழ் சினிமா துறையில் 80களில் கொடி கட்டி பரந்த நடிகர்களில் நடிகர் முரளி அவர்களும் ஒருவரே. தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு தனி கூட்டத்தை வைத்து இருந்தவர். இவர் தமிழில் தனது முதல் படமான பூவிலங்கு என்னும் படம் மூலம் அறிமுகமாகி பல கோடி மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடா மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் முரளி அவர்கள் தமிழில் வெற்றி கொடி கட்டு, இதயம், நம்ம ஊரு பூவாத்தா, ஆனந்தம், பூ வாசம் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

   

இதயம் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்ததால் இவருக்கு இதயம் முரளி என செல்லமாக மக்களால் அழைக்கப் பெற்றார். இவரது மகன் நடிப்பில் வெளியான பானா காத்தாடி படத்தில் தான், இறுதியாக நடிகர் முரளி நடித்திருந்தார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்த சம்பவம், தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. இவரின் இறப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பை தந்தது.

நடிகர் முரளியின் மகன் நடிகர் அதர்வாவை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவரின் குடும்பத்தை இதுவரை நாம் பார்த்ததில்லை. இந்நிலையில் முதல் முறையாக மறைந்த நடிகர் முரளியின், மனைவி, மகன்கள், மகள் என முழு குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை நடிகர் முரளியின் மகன், நடிகர் அதர்வா எடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..