மீண்டும் ஒரு போட்டோஷூட்! கடற்கரையில் நடிகை அனிகா எடுத்த புகைப்படம்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர், என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். இதன் மூலம் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தார்.

   

இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் இவர் நானும் ரவுடி தான், மிருதன், பாஸ் என்கிற பாஸ்கரன், உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மலையாள படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவது வழக்கம்.

 

மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக அனிகா நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். படங்களில் நடித்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்களை கவர்வதற்கு போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இந்நிலையில் சமீபத்தில் கடற்கரையில் நடத்திய சிம்பிள் போட்டோஷூட் புகைப்படங்களை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..