யாருப்பா இந்தக் குழந்தை.. வைகைப் புயல் வடிவேலுவையே மிஞ்சிடும் போலருக்கே.. என்ன அழகான பெர்மான்ஸ் பாருங்க..!

சின்னக் குழந்தை ஒன்று பாயை விரிக்கும் காட்சி இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

   

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

இங்கேயும் அப்படித்தான். ஒரு குழந்தை தன் வீட்டில் இருக்கும் பாயை எடுத்து தரையில் விரிக்க முயல்கிறது. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதுபோல் பொதுவாகவே பாய் ஒரு பக்கம் விரிக்கும் போதே, இன்னொரு பக்கம் சுருங்கும். இதை நாம் வடிவேலு காமெடியிலேயே பார்த்திருப்போம். அந்தக் காமெடியில் வடிவேலு குடித்துவிட்டு அதகளம் செய்வார். அதேபோல் இங்கேயும், ஒரு குழந்தை பாயை விரிக்கிறது. அந்த பெர்மார்மன்ஸில் இந்தக் குழந்தை வடிவேலுவையே மிஞ்சிவிடும் போலிருக்கிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்கள்.