விபத்தில் சிக்கிய 10 வயது மகன்.. கருணை கொ.லை செய்ய கோரிய தாய்..! இறுதியில் நடந்த விபரீதம்!!

விபத்து காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் கருணை கொலைக்கு அனுமதி கேட்க நீதிமன்றத்திற்கு சிறுவனை அழைத்து சென்ற தாய் திரும்பி வரும் வழியில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரிஜிபள்ளி கிராமத்தை சேர்ந்த மணி,அருணா ஆகியோரின் பத்து வயது மகன் ஹர்ஷவர்தன். அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் வீட்டின் மேல்மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தான். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹர்ஷவர்தன் உடல்நிலை தேறி பள்ளிக்கு சென்று வந்தான்.

இந்த நிலையில் திடீரென்று அவனுடைய கண்கள், வாய், மூக்கு, ஆசனவாய் ஆகியவற்றிலிருந்து ரத்தம் வெளிப்படத் துவங்கியது. எனவே அவனை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனாலும் நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட அவனுடைய தந்தை மணி எங்கோ சென்றுவிட்டார். இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற அருணா, மகனுக்கு சிகிச்சை அளிக்க இயலாமல் மனம் கலங்கினார்.

இனிமேல் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கருதிய அருணா, மகனை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டி புங்கனூர் நீதி மன்றத்திற்கு அழைத்து சென்றார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நீதிமன்றத்துக்கு விடுமுறை ஆகையால், மகனை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பி சென்றார் அருணா.

ஆனால் துரதிஷ்டவசமாக ஹர்ஷவர்தன் வீடு திரும்பும் வழியில் பரிதாபமாக மரணம் அடைந்தான். ஹர்ஷவர்தன் மரணம், அவனுடைய தாயின் பரிதாபநிலை ஆகியவை அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.