டீ வாங்க கூட காசு இல்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகை… உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?… வருத்தத்தில் ரசிகர்கள்…

பாலிவுட் பிரபல நடிகையான பூஜா தட்வால் தற்பொழுது அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஹிந்துஸ்தான், மேடம் நம்பர் 1 உள்ளிட்ட பல வெற்றி படங்களில் முன்னணி நாயகி ஆக நடித்தவர் பிரபல நடிகை பூஜா தட்வால். இவர் முதல் முறையாக வீர்க்கத்தி என்னும் படத்தில் நடித்துதான் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். இவர் ஹிந்தி படத்தில் பிரபல நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதன் பின்னர் பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது.

   

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்பொழுது மார்க்கெட் குறையும் என்பது தெரியாத ஒன்றுதான். இதைத்தொடர்ந்து காச நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து தற்போது அரசு மருத்துவமனையில் டீ வாங்க கூட காசு இல்லாமல் சிகிச்சை பெற்று வரும் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

47 வயதாகும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காசநோயால் பாதிக்கப்பட்டார். இவருக்கு நோயின் தாக்கம்  அதிகமாகவே இவருடைய குடும்பத்தினர் மும்பையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். பின்னர் அவரை மருத்துவமனையிலேயே அனாதையாக விட்டுவிட்டு அவருடைய குடும்பத்தினர்கள் அங்கிருந்து சென்று விட்டனர் என்று கூறப்படுகிறது.

இவரை அனுமதித்த முதல் நாள் மட்டுமே இவர்கள் அவருடன் இருந்ததாகவும் அந்த மருத்துவமனையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது நடிகை பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் வருபவர்களிடம் கையேந்தி  வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகை பூஜாவுக்கு திருமணம் ஆகி கோவாவில் ஒரு சூதாட்ட கிளப்பில் மேலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

தற்பொழுது காசநோயின் தாக்கத்தால் இவர் அனாதையாக காசு இல்லாமல் தவித்து வருவதாகவும், நடிகர் சல்மான் கானிடம் உதவி கேட்டு இருப்பதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் சல்மான் கான் இவருக்கு உதவியதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.