பாட்டில்ல தண்ணி நிரப்புற போட்டிய பார்த்திருப்போ?…. ஆனா இப்படி விளையாடி யாராவது பாத்திருக்கீங்க….. செம விளையாட்டு போங்க…!!!

இணையத்தில் நாள்தோறும் குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் குவிந்து வருகின்றது. இது பார்ப்பதற்கு அழகாக ரசிக்கும் வண்ணம் உள்ளது.  இணையதளம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டு உள்ளது. அதற்கேற்றார் போல் மக்களும் தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர்.  அதெல்லாம் விட குழந்தைகள் தான் அட்வான்ஸாக உள்ளனர். செல்போன்களில் புகுந்து விளையாடி எங்கெங்கு எது உள்ளது என்பது முதற்கொண்டு அனைத்தையும் கற்றுக் கொள்கின்றனர்.

   

இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் மக்களிடையே எளிதாக சென்றடைகின்றது. இதனால் பல வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் வந்துவிடுகிறது. நகர்ப்புறங்களில் இருக்கும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியில் செல்வது கிடையாது. வீட்டிற்குள்ளேயே செல்போன்களில் வீடியோ கேம், டிவியில் பொம்மை படங்கள் போன்றவற்றை பார்த்துக்கொண்டு அடங்கி விடுகின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களுக்கு அப்படி கிடையாது.

வீட்டிற்கு வெளியில் சென்று நண்பர்களுடன் இணைந்து மண் புழுதி என்று விளையாடுவது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுதான் நன்மையும் கூட அப்படி புதிதாக ஒரு விளையாட்டை கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது எந்த ஊரில் நடந்தது என்பது தெரியவில்லை. இடுப்பில் கயிறை கட்டிக்கொண்டு அதில் ஒரு குச்சியை தொங்கவிட்டு தூரத்தில் ஒரு பாட்டிலை வைத்துள்ளனர். அதில் அந்த குச்சியை கொண்டு உள்ளே விட்டு அதை எடுத்துக் கொண்டு ஓட வேண்டும். இந்த விளையாட்டை பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரண்ட்டாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by master_guna (@gunaseelan.seelan.7370)