அம்மா நான் சும்மா இல்லடா….! வெளிநாட்டில் இருந்து வரும் மகனை பார்க்க வலிமேல் விழி வைத்து காத்திருக்கும் தாய்…. நெகிழ்ச்சியான தருணம்….!!!

வெளிநாட்டில் இருந்து வரும் மகனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் தாயின் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வந்து குவிந்து கிடக்கின்றது. இதில் சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். நம்மை நெகழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். பொதுவாக உறவுகள் என்பது மிகவும் உன்னதமான ஒன்று.

   

அதிலும் தாய், தந்தை,மகன், மகள் போன்ற உறவுகள் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களை கொடுக்கும், ஒரு வீட்டில் தாய், தந்தை. மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் என்றால் பெரும்பாலாக மகள்கள் தந்தையுடனே அதிக பாசத்துடன் இருப்பார்கள். அதேபோல மகன்கள் தாயுடனே பாசத்துடன் இருப்பார்கள். மகன்கள் தங்களுக்கு வேண்டிய அனைத்தையும் தந்தையிடம் கேட்காமல் முதலில் தாயிடம் தான் சென்று கேட்பார். ஏனென்றால் தாய் தான் மகனுக்கு எப்போதும் சப்போர்ட்டாக இருப்பார் என்று..

இங்கு ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் தனது மகனை பார்ப்பதற்கு விமான நிலையத்தில் ஒரு தாய் ஆவலுடன் காத்து கிடக்கிறார். அவர் வந்தவுடன் வேகமாக ஓடி சென்று அந்த தாய் கட்டி பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…