இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?…..மருத்துவமனையில் மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய நடிகர் பாலா…! என்ன நடந்தது தெரியுமா?….!!!

திரைப்பட நடிகர் பாலா, இவர் தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளியான ‘அன்பு’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்கள் நடித்திருந்தார்.

   

இந்நிலையில் 2014ஆம் ஆண்டில் வெளியான வீரம் படத்தில் அஜித்குமார் உடன் நடித்திருந்தார்.  தற்போது எந்த பட வாய்ப்புகளும் இல்லாத நிலையில் உள்ளார், இந்நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதில் நடிகர் பாலா கல்லீரல் நோய் காரணமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தற்போது மோசமான நிலையில் உள்ளார்.

அவர் மனைவி எலிசபெத், இவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் தனது இரண்டாவது திருமண நாளை கொண்டாடி வருகிறார். அவர் தன் மனைவி எலிசபெத் உடன்  கேக் வெட்டி கொண்டாடினர் .

அந்த கேக் வெட்டும் வீடியோவை பாலா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவருக்கு பெரிய அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாகவும் மீண்டும் நான்  பிழைத்து வருவேன் என்றும் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்தார். மேலும் கடுமையான இருமல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது அடுத்து அவர் சிகிச்சை பெற்றார்.

மருத்துவமனைக்கு வந்த உடனே மயங்கி விழுந்ததை அடுத்து அவர் ஐசீயூவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மனைவி பேசுகையில், மக்கள் காட்டிய அன்புக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக்  பதிவில்  உருக்கமாக பேசியுள்ளார்.