‘எனக்கு இப்ப அந்த வார்த்தையை கேட்டாலும் பயமா இருக்கு’… படப்பிடிப்பில் ஒரு பெண்ணிடம் செம பல்பு வாங்கிய கார்த்தி… என்ன நடந்தது தெரியுமா?…

நடிகர் கார்த்தி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு இளம் நடிகர்.மக்களுக்கு சாதாரணமாக காதல், நடனம், காமெடி படங்கள் என கொடுக்காமல் தனது கதை தேர்வில் வித்தியாசம் காட்டி மக்களுக்கும் ஒருபுதுவித அனுபவத்தை கொடுத்து வருகிறார். இயக்குனர் மணிரத்னத்திடம் ‘ஆயுத எழுத்து’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நடிகர் கார்த்தி.

   

‘பருத்திவீரன் படத்தின்’ மூலம் ஹீரோவான இவர், அப்படத்தின் வெற்றியினால் வெற்றி நாயகனாக சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்து பாராட்டைப்பெற்றார் கார்த்தி. இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த ‘பையா’ திரைப்படம் கார்த்தியை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச்சென்றது.

தொடர்ந்து நான் மகான் அல்ல, சிறுத்தை போன்ற படங்களின் வெற்றியின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். பின்பு சில தோல்வி படங்களை கொடுத்தாலும் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பினார்.
அதைத்தொடர்ந்து கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்றுசாம், விருமன் என தொடர்வெற்றிகளை கொடுத்து வந்தார்.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று ரசிகர்களின் பாராட்டை பெற்றார் நடிகர் கார்த்தி. இந்நிலையில் நடிகர் கார்த்தி ‘பையா’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

பையா திரைப்படத்தில் காரை ஓட்டிக்கொண்டு வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது அந்த பக்கமாக சென்ற ஒரு பெண் தமன்னாவை பார்த்தவுடன் கண்டுப்பிடித்துவிட்டார். வேகமாக தமன்னாவிடம் வந்தவர் “மேடம் உங்களை எனக்கு தெரியும். நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க” எனக் கூறியுள்ளார்.

உடனே தமன்னா கார்த்தியை காட்டி இவரும் நடிகர்தான் பருத்திவீரன் படத்துல நடிச்சிருக்கார் இல்லையா? அவர்தான் என கூற, அந்த பெண் அப்போதுதான் கார்த்தியை பார்த்தார்.உடனே கார்த்தியை அடையாளம் கண்டுக்கொண்டு ‘நீங்களும் அழகா இருக்கீங்க சார்’ என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அதன் பிறகு தினசரி காலையில் படப்பிடிப்பு துவங்கும் போதெல்லாம் கார்த்தியை இதை சொல்லியே கலாய்த்துள்ளார் தமன்னா. ஒரு பேட்டியில் இதை கூறிய கார்த்தி. ”இப்போதெல்லாம் யாராவது நீங்க அழகா இருக்கீங்க’ ன்னு சொன்னாலே பயமா இருக்கு என கூறியுள்ளார். தற்பொழுது நடிகர் கார்த்தியின் இந்த பேட்டியானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.