நடிகர்  நிழல்கள் ரவியின் மனைவி மற்றும் மகனை பார்த்து உள்ளீர்களா?… அரிதான குடும்ப புகைப்படம் இதோ…

தமிழ் திரை உலகில் முன்னணி  நடிகர்களில்  ஒருவராக வலம்  வந்தவர்  நிழல்கள் ரவி.  இவர் ஏப்ரல் 16தேதி 1953 ஆம் ஆண்டு பிறந்தார்.

   

பூ.சா.கோ கலைக்கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

இவர் கோயம்புத்தூரை சார்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

ரவி ‘ நிழல்கள் ‘என்ற படத்தில் மூலமாக 1980 இல் தமிழ் திரையுலகில் தனது  வாழ்க்கையை தொடங்கினார்.

இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  நிழல்கள் ‘ படத்தில் நடித்தது மூலமாக நிழல்கள் ரவி என்று அழைக்கப்பட்டார்.

இப்படமானது இவருக்கு மிக  பெரிய வெற்றி படமாகவே அமைந்தது. அவ்வாறு அமைந்தும் பெரிய கதாநாயகனாக வரவில்லை.

இவர்  தமிழில் ராமானுஜம், வடசென்னை, சிங்கம் 2 ,ஒஸ்தி ,ஆடு புலி ,இளைஞன் ,காவல் மண்டபம், குடியரசு ,இந்திர விழா, ஓசை ,சின்னத்தம்பி, மாப்பிள்ளை ,அண்ணாமலை, நாயகன்,  சின்னத்தம்பி பெரியதம்பி,  உட்பட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஒரு அன்பான தந்தையாகவும், இரக்கமான வில்லனாகவும்,  கதாநாயகனாகவும் என பல குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார்.

1980 களில் மலையாளத்தில் மட்டும் 25 படத்திற்கு மேல் நடித்து வந்தார். 80 பிற்பகுதியிலும் 90 ஆரம்பத்திலும் கே. பாலச்சந்திரனின் இயக்கத்தின் தொலைக்காட்சி தொடரான ‘ரயில் சினேகம்’ என்ற  சீரியலில்  நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து அலைகள், காசளவு நேசம்,  தென்றல் போன்ற சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 40 ஆண்டுகளாக சினிமா துறையில் கால் பதித்து நடித்து வருகிறார். இவர் எந்த வேடம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடித்த முடிப்பார் இதனாலே மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பு இருந்தது .

இவர் விஷ்ணு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்  இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவரின் குடும்ப புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.