நடிகை ஆத்மிகா.., தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இவர். இந்த படத்தின் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானாலும் அதன் பிறகு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.
மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக இவர் நடித்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை. மேலும், விஜய் ஆண்டனியுடன் ” கோடியில் ஒருவன் ” நடித்தார் அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் வைபவ் நடிகை வரலட்சுமியுடன் காட்டேரி, நடிகர் உதயநிதியுடன் கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். கண்ணை நம்பாதே படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. ஒருபக்கம் பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஆத்மிகா.
ஆனால், தற்போது புடவையில் அடக்கமாக போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆத்மிகா. இந்த புகைப்படங்களை அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று சொல்ல்லாம்.