‘பத்ரி’ திரைப்பட நடிகை பூமிகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…

தமிழ் திரையுலகில் விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்  நடிகை பூமிகா.

   

இவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி 1978 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் புது டெல்லியை பூர்விகமாகக் கொண்டவர்.

2000 ஆம் ஆண்டில் ‘யுவகுடு’என்ற தெலுங்கு  திரைப்படம் மூலம் திரையுலகில்   அறிமுகமானார்.

இவர் தெலுங்கில்  வெளியான குஷி படத்தில் நடித்தார். இப்படத்திற்கு  சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார் .

இவர் ஸ்ரீகாந்த்  நடிப்பில் வெளியான ‘ரோஜா கூட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின்  மூலமாக ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

பிரபலமான  முன்னணி நடிகர் சூர்யாவுடன் ‘ஜில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தில் நடித்து  தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் தமிழ் ,ஹிந்தி ,மலையாளம் ,பஞ்சாப் என பலமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பூமிகா கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகி தன் குடும்பத்தை கவனித்து வந்தார் .

44 வயதானாலும் தனது உடலை பிட்டாக வைத்து தற்போது நடிக்கும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இளமையோடு உள்ளார்.

நடிகை பூமிகா மறுபடியும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். ஜெயம் ரவி 30-வது படத்தில் அவருக்கு அக்காவாக  நடிக்க  கமிட்டாகி  இருக்கிறாராம்.

இவர்  2018 ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான’ u turn’ என்ற படத்திலும் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்திலும்  நடித்துள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.