நடிகை பூஜா ஹெக்டே வீட்டில் நடந்த திருமணம்… ஆனந்த கண்ணீருடன் அவரே வெளியிட்ட புகைப்படங்கள்… நீங்களே பாருங்க…

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் தான் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். மாடல் அழகியான நடிகை பூஜா ஹெக்டேவை ‘முகமூடி’ திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் அறிமுகப்படுத்தினார்.

   

இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி வந்தார். தெலுங்கு சினிமா இவருக்கு கை கொடுத்தது. இதை தொடர்ந்து சூப்பர் ஹிட் நடிகையாக வலம் வந்தார். தற்பொழுது தெலுங்கு ,தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் துலு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பூஜா ஹெக்டே. இவருக்கு 22 பில்லியனுக்கும் அதிகமான போல்லோவர்ஸ்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். தற்பொழுது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டேவின் வீட்டில் அவரது அண்ணனின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தற்பொழுது நடிகை நடிகை பூஜா ஹெக்டே தனது அண்ணனின் திருமண புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பதிவில், ”என் அண்ணன் உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார். என்ன ஒரு அற்புதமான விழா, ஆனந்த கண்ணீருடன் இந்த திருமணத்தை பார்த்து நான் அழுதேன், ஒரு குழந்தையை போல் சிரித்தேன்.

அண்ணா உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் அடிகெடுத்து வைத்துள்ளீர்கள். நீங்கள் எங்களை மிகவும் நேசித்தது போல் உங்கள் மனைவியையும் நேசிப்பீர்கள் என்று நினைக்கிறேன். முழு மனதுடன் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சிறப்பாக வாழ்வீர்கள் என்று நம்புகிறேன். பிரமிக்கத்தக்க அழகுடன் உள்ள மணமகளை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.