
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கச்சேரிக்கு மொத்தமாக 35 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விற்கப்பட்டது கிட்டத்தட்ட 2 முதல் 3 லட்சம் டிக்கெட்டுகள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் நேற்று மாலை கச்சேரி நடந்த அந்த இடத்தில் பெரும் குழப்பமும், சலசலப்பும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
அதாவது அந்த டிக்கெட்டில் தரவரிசைப்படுத்தப்பட்டு கோல்ட் டிக்கெட் விலை ரூ. 2000, பிளாட்டினம் மற்றும் டைமண்டு போன்ற டிக்கெட்களின் விலை ரூ. 5000 என்றும் விற்கப்பட்டது. ஆனால், யார் யார் எந்தெந்த டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என கவனிக்காமல் 35 ஆயிரம் பேர்களை மட்டும் உள்ளே அனுமதித்து, மற்றவர்களை அனுமதிக்கவில்லை. எனவே ரூ. 2000 மற்றும் ரூ. 5000 கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அனைவரும் கடும் கோபமடைந்து, அங்கு சில சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் சில ரசிகர்கள் கதறி அழுது, மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளையராஜா கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இசை கச்சேரி ஒன்றில் நடந்துகொண்ட விதம் மட்டும் ரசிகர்களுக்கு தவறாக தெரிந்தது என்றும் இப்போது ஏ.ஆர். ரஹ்மான் செய்தால் மட்டும் அது தவறாக தெரியவில்லை. இவ்வாறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Imagine paying 2000 rupees for gold tickets and this is what you get? What a shit show. Had to return back without even entering. #ARRConcert #marakumanenjam pic.twitter.com/r8c64JLOuP
— Uncle Fed (@WhatTheFahad) September 10, 2023
Exactly pic.twitter.com/r1K4B1pszO
— Alex Raaja ❣️???? (@mail2alexraaja) September 10, 2023