ராபர்ட் மாஸ்டர் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசிய ரக்ஷிதா… அவர் இப்படிப்பட்டவரா?… வைரலாகும் வீடியோ இதோ…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது . இறுதிக்கட்டத்தை எட்டி வரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 21 போட்டியாளர்களில் ஒருவர் தான் ரட்சிதா. இவர் சமீபத்தில் இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

   

இந்நிலையில் தற்பொழுது இணையத்தில் முதல் முறையாக ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டர் குறித்து கூறியுள்ளார். அதாவது இவர் இணையத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ராபர்ட் மாஸ்டர் குறித்து கேட்கப்பட்டது . அதற்கு அவர் ‘நான் கூறியது அப்படிப்பட்ட ஒரு நபர் இப்போது இல்லையே என்று தான் கூறியிருந்தேன். அந்த வார்த்தை சொன்னதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் எத்தனை கேமராக்கள் இருந்தும், என்னை மட்டுமே ஒரு கண் பார்ப்பது போன்ற உணர்வைத்தான் கொடுத்தது.

எனவே அந்த நபர் இப்போது இல்லை என்று தான் பேசிக் கொண்டிருந்தேன். அதுதான் உண்மையான காரணம் ‘என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் குழந்தை போன்றவர். அவரிடம் ஏதாவது ஒரு குழந்தைத்தனம் கண்டிப்பாக இருக்கும். அவருக்கு எடுத்து சொல்லியதே நான் தான் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவின் பின்னால் சுற்றியதும் அவரை ஒருதலையாக காதலித்ததும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதனால் ராபர்ட் மாஸ்டர் தனது விளையாட்டில் கவனம் செலுத்தாமல் குறைந்த வாக்குகள் பெற்ற ரட்சிதாவிற்கு முன்னால் வெளியேறினார்.

இதை தொடர்ந்து ரட்சிதா தனது விளையாட்டு சிறப்பாக விளையாடி பல லட்சங்களுடன் சமீபத்தில் வெளியேறினார். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் பற்றி நடிகை ரக்ஷிதா கொடுத்த இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் படுவைரல் ஆக்கப்பட்டு வருகிறது. இதோ வீடியோ…