‘அம்மாவைப் போல மகள்… அப்பாவைப் போல மகன்’… வேஷ்டி சட்டையில் கலக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் மகன்… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தோடு இணைந்து பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பயணத்தை தொடங்கினார். தனது கடின உழைப்பால் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்தார். இவர் தமிழில் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். முதல் படமே இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

   

அடுத்ததாக வெளியான ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புனையாக அமைந்தது என்றே கூறலாம். இதைத் தொடர்ந்து டாக்டர், டான் என இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ஹிட் அடித்தது. அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இவர் நடிப்பில் தற்பொழுது ‘மாவீரன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். மேலும் இவர் நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் சயின்ஸ் பிக்சன் கதைகளத்தை கொண்டது. இவ்விரண்டு திரைப்படங்களை. இந்நிலையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் இணைந்து பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அம்மாவைப் போல இருக்கும் மகள்.. அப்பாவை போல மகன்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ….