தமிழ் திரை உலகில் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு மயில் கல்லாக சில இயக்குனர்களுக்கு மட்டுமே அமையும்.
அப்படி கே பாலசந்தர்,பாலு மகேந்திரா போன்ற ஆளுமைகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின் முக்கியமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் செல்வராகவன்.
இவர் தமிழில் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
இவர் ஆவார், சாணி காகிதம், மிருகம் மற்றும் அவரது நானே ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததற்காக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய பகாசுரன் திரைப்படத்தில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து அவரின் ரசிகர்கள் செல்வராகவனின் அடுத்த திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக அவரின் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகியவற்றின் தொடர்ச்சிகளும் அடங்கும்.
தனித்துவமான சினிமா அனுபவங்களை உருவாக்கும் திறனுக்காக செல்வராகவன் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவரின் தனித்துவமான கதை சொல்லும் பாணி அவரை திரைப்படத்துறையில் ஒரு முக்கிய நபராக ஆக்கியுள்ளது.
இவர் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களின் திருமண வாழ்க்கை 2010 வரை மட்டுமே நீடித்தது.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்ட நிலையில் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை 2011 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு லீலாவதி என்ற மகன் பிறந்தார், அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ஓம்கர் என்ற மகனும் பிறந்தார்.
பின்னர் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் இவர்களுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு ரிஷிகேஷ் என புனித தளத்தின் பெயரை வைத்துள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.
தற்போது செல்வராகவனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.