மனம் திறந்த கோலிசோடா புகழ் சீதா….. அழகு இருந்தால்தான் சினிமா வாய்ப்பு கிடைக்குமா?….. கோலி சோடா நடிகையின் தற்போதைய நிலை?….!!!!

தமிழ் சினிமாவில் அந்தந்த காலங்களில் பல காமெடி நடிகைகள் வந்து போகும் நிலையில் கோலிசோடா திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் சீதா. இந்த திரைப்படம் இவருக்கு நல்ல புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில் அவர் கோலிசோடா படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி மனம் திறந்துள்ளார்.

   

அதில் அவர் கூறிய போது அவர் வீட்டில் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை மற்றும் அம்மா வீட்டு வேலை செய்துதான் குடும்பத்தை பார்த்து கொள்கிறார்கள். மேலும் தான் பிஏ படிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். தனது தாய் தான் குடும்பத்தை பார்த்துக் கொள்வதாகவும் வருங்காலத்தில் தனது தாயைப் பார்த்துக் கொள்வது தான் தன்னோட ஆசை என்றும் கூறியுள்ளார்.

பட வாய்ப்பு பற்றி கூறிய போது இயக்குனர் விஜய் மில்டன் என்னிடம் பெயர் போன் நம்பர் எல்லாம் கேட்டதாகவும் அதை அவர் தர மறுத்து திட்டியதாகவும் கூறியுள்ளார். அதன் பின் தனது நண்பர் வீட்டிலும் வந்து கேட்டதாகவும் அவர்களும் அவரை திட்டியதாக கூறினார்.

இந்நிலையில்  என் வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம் என்னை நடிக்க அனுப்ப வேண்டும் என்று கூறி அம்மாவின் ஆசைக்காக தான் சினிமாவுக்கு வந்தேன் என்று கூறியுள்ளார். தற்போது தன் அடுத்த படத்திலும் இயக்குனர் விஜய் மில்டனுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறினார்.

மேலும் ஆரம்பத்தில் நான் படம் நடிக்கிறேன் என்று சொல்லும் போது யாருமே நம்பவில்லை உன்னோட மூஞ்சிக்கு எல்லாம் பட வாய்ப்பு கிடைக்குமா என்று கேலி செய்தனர். நடிப்பதற்கு அழகு தானே வேணும் நான் ஏடிஎம் தானே, எனக்கு இன்னும் நிறைய படங்களில் நடிக்கணும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.