20 வருசமா நடந்த போராட்டம்.. கவுண்டமணிக்கு கிடைத்த வெற்றி.. அப்படி என்ன நடந்தது..?

நகைச்சுவை மன்னனாக வலம் வந்த நடிகர் கவுண்டமணி முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்தால் அவர்களையே மிஞ்சும் அளவிற்கு கவுண்டர்களை போடுவார். அந்த அளவிற்கு நகைச்சுவையில் உச்சம் தொட்டவர் என்றே கூறலாம்.

   

இந்நிலையில் கவுண்டமணி, கடந்த 1996-ஆம் வருடத்தில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் நிலத்தை வாங்கி 22,700 சதுரடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி தர வேண்டும் என்று ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

கட்டுமான பணிகளுக்காக 3 கோடியே 58 லட்ச ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், கடந்த 1996-ஆம் வருடத்திலிருந்து 1999-ஆம் வருடம் வரை கவுண்டமணி சுமார் 1 கோடியே 4 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார். ஆனால், 2003-ஆம் ஆண்டு வரை கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை.

இதனால், கவுண்டமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையில் , 46 லட்சத்து 51 ஆயிரம் மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டது, வழக்கறிஞர் அறிக்கை வாயிலாக தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, கவுண்டமணியிடம் பெறப்பட்ட 5 கிரவுண்ட் (454 சதுர அடி) நிலத்தை அவரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

2008-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் சொத்து ஒப்படைக்கப்படும் வரை, மாதம் 1 லட்சம் வீதம் கவுண்டமணி, அவரின் மனைவி சி.எம் சாந்தி, மகள்கள் சி.எம். செல்வி, சி.எம். சுமித்ரா ஆகியோருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. 2019-ஆம் வருடத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, 2021-ஆம் வருடத்தில் ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் மேல் முறையீடு செய்தது. தற்போது அந்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.