கல்யாணம் முடிந்த கையோடு விருது…..! எல்லாம் என் மனைவி வந்த நேரம்….. பூரித்துப்போன கணவர்….!!!

திருமணம் முடிந்த கையோடு அரசு அலுவலகர் ஒருவருக்கு விருது கிடைத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு குடியரசு தின விழா வரும் சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், காவலர்கள் என அனைவருக்கும் விருது வழங்குவது என்பது வழக்கம் தான்.

   

74ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் விழா நடைபெற்றது. இங்கு அரசு அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் ஆடிட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் செல்வமணி என்பவருக்கு திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த கையோடு மைதானத்திற்கு வந்த தம்பதிகள் அந்த விருதை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அலுவலர் எனது மனைவி வந்த நேரம் எனக்கு விருது கிடைத்துள்ளது என்று மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.