விடுதலை பட நாயகி இளையராஜாவின் வாய்ப்பை மறுத்து விட்டாரா??….. ஜிவி பிரகாஷின் தங்கை சொன்ன விஷயம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களின் ஒருவர் ஜிவி பிரகாஷ் குமார், இவர் தற்போது இசையமைப்பாளர் நடிகர் பாடகர் என பல பரிணாமங்களில் உள்ளார். இந்நிலையில் இவரின் தங்கை பவானி ஸ்ரீ, கா பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

   

தற்போது இவர் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை என்ற இடத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மூலமாகத்தான் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு இந்தப் படத்தை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். மேலும் இக்கதை ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருந்தது.

விழாவில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசியிருந்தனர். அதில் வெற்றி மாறன் நல்ல இயக்குனர் என்றும் 1500 படங்களுக்கு இசையமைத்த பின்னர் இதனை தான் உணர்ந்ததாக இளையராஜா கூறினார்.

விடுதலை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை பவானி ஸ்ரீ  சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசி இருந்தபோது அவர் இதில் கிராமத்தில் காவலராக பணியாற்றி வரும் கான்ஸ்டபிள் உடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு பழங்குடியின பெண்ணாக தான் நடித்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுடன் பணியாற்றுவது எல்லா நடிகர்களுக்கும் ஒரு கனவாக இருக்கும் அது எனக்கு  இவ்வளவு விரைவாக கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார். இயக்குனர் வெற்றிமாறன் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல் ஒரு நல்ல மனிதர் என்றும் புகழ்ந்துள்ளார்.

இந்த படப்பிடிப்பு எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்று கூறினார். மேலும் நடிகர் சூரி அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார் கண்டிப்பாக அவருக்கு பாராட்டுகள் குவியும் என்றும், படப்பிடிப்பு நடந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்தது என்றும் கூறினார்.

மேலும் பேசுவையில் ரசிகர்கள் அதிகரித்து விட்டாரா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் , “எனக்கு அதிகமாக ரசிகர்கள் வந்து விட்டனரா என்று அது உண்மைத் தன்மை தெரியாது, ஆனால் நான் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன்.

எனவே இந்த பாராட்டுக்கள் கிடைத்ததற்கு எனக்கு மகிழ்ச்சி தான், தன் திறமையான இசை நாள் அழகான பாடல்களை ஏற்றி இருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தான் எல்லா பாராட்டுகளும் சேரும்.

என்னுடைய குடும்பத்தில் என்னை இசை கற்றுக்கொள்ள சொல்லி பலமுறை என்னுடைய குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள். ஆனால் நான் சரியாக கற்றுக் கொள்ளவில்லை. இசைஞானி இளையராஜா கூட ஒரு பாடலை பாட சொல்லி என்னிடம் கேட்டபோது நான் மறுத்து விட்டேன் என்றும் கூறினார். மேலும் விடுதலை படத்தை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்று கூறினார்.