‘சூப்பர் சிங்கர்’ புகழ் செந்தில் மற்றும் ராஜலட்சுமி திருமண புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?… இது அவர்கள் தானா?… நீங்களே பாருங்க…

‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செந்தில் ராஜலட்சுமி தம்பதியினரின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

நாட்டுப்புற பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் தான் செந்தில் மற்றும் ராஜலட்சுமி. இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தங்களின் திறமையை நிரூபித்து டைட்டிலையும் வென்றனர். இதன் மூலம் தற்பொழுது பிரபல பாடகர்களாக இருவரும் வலம் வந்து கொண்டுள்ளனர்.

   

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இவர்களது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது இவர்கள் பல கச்சேரிகளை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல பாடல்களை பாடியும் வருகின்றனர்.

சமீபத்தில் ராஜலட்சுமி ‘ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா’ என்ற ஒரு சூப்பர் ஹிட் பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடகர்களாக மட்டுமின்றி தற்போது இவர்கள் நடிகராகவும் களமிறங்கியுள்ளது இந்த ஜோடி. இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் 2012 மே 23 இல் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இவ்வர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘ இது அவர்கள் தானா? சிறு வயது பிள்ளைகளை போல இருக்காங்களே?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்

வைரலாகும் திருமண புகைப்படங்கள் இதோ…