‘நான் வந்த வேலை முடிஞ்சிடுச்சு’… கண் கலங்கி அழுத சிவின்… ரசிகர்களின் மனதை கலங்க வைத்த ப்ரோமோ இதோ…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. 5 சீசன்களை கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்பொழுது 6வது சீசன் தொடங்கி அதுவும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

   

இறுதியாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு கதிர்  வெளியேறினார். இதை தொடர்ந்து தற்போது யார் டைட்டில் வெல்ல போகின்றார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் வாழ்ந்த நாட்கள், செய்த டாஸ்குகள் என்று இது குறித்த நினைவு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் சிவினை பார்த்து பிக் பாஸ் ‘உங்களால் இந்த வீட்டிற்கும், இந்த நிகழ்ச்சிக்கும், ஏன் இந்த முழு சமுதாயத்திற்குமே பெருமை. நீங்க இனிமேல் எங்கும் ஓடி ஒளிய தேவையில்லை. உங்களை வரவேற்க வெளியில் ஏராளம் தாய்மார்கள் உள்ளனர்’ எனக் கூறுகின்றார்.

இதற்கு உடனே சிவின் கையெடுத்து கும்பிட்டு அழுது ‘எல்லோருக்குமே நன்றி. நான் வந்த வழி முடிஞ்சிடுச்சு என்று நினைக்கிறேன்’ என்று அழுகிறார். தற்பொழுது இந்த பிரமோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதையும் கண்களையும் கலங்க வைத்துள்ளது.

வைரலாகும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ….