தளபதி விஜயுடன் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடும் பொழுது நான் மூன்று மாத கர்ப்பம்… மனம் திறந்த பிரபல நடிகை… வைரலாகும் நேர்காணல் இதோ…

நடிகர் விஜயுடன் இணைந்து குத்து பாட்டுக்கு நடனம் ஆடும் போது கர்ப்பமாக இருந்ததாக பிரபல நடிகை மாளவிகா தற்போது இணையத்தில் தெரிவித்துள்ளார்.

1999ல் வெளியான ‘உன்னைத் தேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இவருடைய நிஜபெயர் ஸ்வேதா மேனன். ஆனால் இவர் அறிமுகமான ‘உன்னை தேடி’ என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயர் தான் மாளவிகா. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து நடிகை மாளவிகாவிற்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

   

ரசிகர்கள் பலரும் இவரை மாளவிகா என்று அழைத்தனர். இதனால் தன்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றிக் கொண்டார் நடிகை சுவேதா மன்னன். இதை தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், வெற்றிக்கொடி கட்டு,  சீனு, லவ்லி, சித்திரம் பேசுதடி, சிங்கக்குட்டி, கட்டுவிரியன், குருவி, ஆயுதம் செய்வோம் என 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை மாளவிகா மோகனுக்கு தற்பொழுது மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்  திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை விட்டும் விலகி இருந்த மாளவிகா தற்பொழுது பொன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோல்மால்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் பிப்ரவரியில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘தளபதி விஜய் உடன் குருவி படத்தில் வரும் ‘ டன்டன்னா டர்னா குருவியோட பாட்டு’ பாடலின் போது நான் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தேன். மருத்துவர்கள் கண்டிப்பாக டான்ஸ் ஆடக்கூடாது என்று கூறிவிட்டதால், நடன இயக்குனர் கஷ்டமில்லாத டான்ஸ் ஸ்டேப் கொடுத்தார். இல்லையென்றால் இந்த பாடலில் இன்னும் கடுமையாக ஆட்டம் போட்டிருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.