நடிகர் பார்த்திபன் யூடியூபில் வந்த தனது மரண செய்தி குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை கையாண்டு வரும் இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் ‘புதிய பாதை’ படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். திரையரங்குகளை மையப்படுத்தி எடுத்த ‘ஹவுஸ் ஃபுல்’ திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. இதன் தொடர்ச்சியாக ஒரே ஒருவர் நடித்த பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் மாபெரும் சாதனை படைத்தது.
சமீபத்தில் வெளியான இவரின் ‘இரவின் நிழல்’ திரைப்படம் உலகின் முதலில் வெளியான சிங்கிள் ஷார்ட் நான்லீனியர் திரைப்படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் நடிகர், இயக்குனர் என சினிமாவில் இரட்டை வேடங்களில் கலக்கி கொண்டு வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது திரை பிரபலங்களின் மரணம் குறித்த தவறான தகவல்கள் பதிவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் பார்த்திபன் மரணம் என்று செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த பதிவிற்கு நடிகர் பார்த்திபன் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். தற்பொழுது இந்த பதிவு படுவைரலாகி வருகிறது.
வைரலாகும் ட்விட்டர் பதிவு இதோ….
நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்! https://t.co/JmQqrxFL9K
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 23, 2023