நம்ம டி ராஜேந்திரனா இவர்?… ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே… என்னாச்சு உங்களுக்கு?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

90 களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த டி ராஜேந்தர் அவர்களின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய அடுக்கு மொழி வசனங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் டி ராஜேந்தர். இவர் 1980ல் வெளியான ‘ஒரு தலை ராகம்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் எப்பொழுதும் தனது படங்களை தானே எழுதி இயக்கி நடிப்பதோடு மட்டுமின்றி பாடல் வரிகளையும் தானே எழுதுவார்.

   

மேலும் அத்திரைபடத்திற்கு தானே இசையும் அமைப்பார்.  இவர் நளினி, அமலா, ஜோதி, ஜீவிதா போன்ற பல நடிகைகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இவரின் மகன்தான் பிரபல நடிகர் சிம்பு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே .தனது தந்தையைப் போலவே தற்பொழுது மகனும் சினிமாவில் கால் பதித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

நடிகர் டி ராஜேந்தர் தனது மகனது திருமணம் குறித்து அதிகம் கவலைப்படுவதால் அவரது உடல்நிலை சரியில்லாமல் அவ்வப்பொழுது போய்விடுகிறது என்று இணையத்தில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவிற்கு தற்பொழுது திருமணம் செய்ய பெண் தேடிக் கொண்டுதான் வருகின்றனர்.  டி ராஜேந்திரன் அவர்கள் கடந்த ஆண்டு உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். தற்பொழுது பொங்கலை முன்னிட்டு டி ராஜேந்திரன் பாட்டு பாடி வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதில் அவர் உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வைரலாகும் அந்த கைப்படம் இதோ…