நடிகர் கவுண்டமணியா இது?… ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரே… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

நடிகர் கவுண்டமணியின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகில் எண்ணற்ற படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் நீங்காத  இடம் பிடித்தவர் கவுண்டமணி. ஒரு சினிமாவை பொறுத்தவரை சண்டை காட்சிகள், காதல் காட்சிகள், காமெடி காட்சிகள் என அனைத்தும் இருந்தால் தான் பார்ப்பவர்களுக்கு ஒரு ஆர்வம் வரும் .

   

நடிகராக நடிப்பது பெரிய விஷயம் இல்லை ஆனால் காமெடி என்பது குறிப்பிட்டு சிலரால் மட்டுமே செய்ய முடியும். அவர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. 80களில் தொடங்கி 90 கள் வரை பல படங்களில் நடித்த இவருக்கு ‘செந்தில்’ தான் ஏற்ற காம்போ. இவருடைய பல படங்கள் ஹிட் ஆவதற்கு நடிகர் செந்திலுக்கும் ஒரு பங்கு உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவர்களது கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக இருந்தது.

இவர் இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வாய்மை’ எனும் படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது பல வருடங்களுக்கு பிறகு நடிகர் கவுண்டமணி புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.இத்திரைப்படத்திற்கு ‘பழனிச்சாமி வாத்தியார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரைப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ‘நடிகர் கவுண்டமணியா இது? ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரே’ஆழ அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….