‘ரோஜா’ சீரியல் நடிகை களமிறங்கும் புது சீரியல் இதுதானா?… இவருக்கு ஜோடி யார் தெரியுமா?… வைரலாகும் அபிஷியல் அப்டேட் இதோ…

ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை பிரியங்கா தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘ரோஜா’. இந்த சீரியல் முதலில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நாயகி ஆக நடிகை பிரியங்கா நல்காரி நடித்தார்.

   

தனது முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் நடிகை பிரியங்கா. இவர் தனக்கு என்று தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தற்பொழுது இந்த சீரியல் 1500 எபிசோடுகளை கடந்து சில தினங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடிகை பிரியங்கா எந்த சீரியலில் நடிக்கப் போகிறார் என எதிர்பாத்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

தற்பொழுது  நடிக்கவுள்ள புதிய சீரியல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது .நடிகை பிரியங்கா ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ‘சீதையின் ராமன்’ சீரியலில் ஹீரோயினாக கமிட்டாகி உள்ளார் என்ற தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் டிஸோசா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இருவருடைய ஜோடியும் எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.